Skip to content

மணல் லாரியை 1 கிமீ தூரம் விரட்டி பிடித்த விஏஓ.. கரூரில் சம்பவம் ..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் திருட்டு தனமாக மணல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி ஒன்று பைபாஸ் சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதை கவனித்த பொதுமக்கள் விஏஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில்  விஏஒ ஸ்டாலின் பிரபு தன்னுடைய பைக்கில் வேகமாக விரட்டியுள்ளார். சுமார் 1கிலோ மீட்டர் தூரம் விரட்டி சேஸ் செய்து லாரியை மடக்கியுள்ளார். விஏஒ லாரியை நெருங்கியதும் லாரியை சாலையிலியே நிறுத்திய டிரைவர் சாவியை எடுத்து கொண்டு தப்பி ஒடிவிட்டார்.  இது குறித்து விஏஓ ஸ்டாலின் பிரபு  கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரனுக்கு தகவல் கொடுத்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மகேந்திரன் லாரியை  மாயனூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து ரெங்கநாதபுரம் விஏஒ ஸ்டாலின் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!