Skip to content

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்…. திருச்சி போக்குவரத்து கழகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருச்சிஅரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் . ஆ. முத்துகிருஷ்ணன் , தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி  எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர்( தொழில்நுட்பம் கூட்டாண்மை ).நாசர் , துணைமேலாளர்(
தொழில்நுட்பம்)  கார்த்திகேயன்,போக்குவரத்து கழக பணியாளர்கள்  கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!