Skip to content

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவும் கடந்த மே 21-ம் தேதி தள்ளுபடியானது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமின் மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் மணீஷ் சிசோடியா வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!