Skip to content

கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சுறுத்தலுடன் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள்

சுற்றித் திரியும் காட்டெருமையை கண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!