விருதுநகர் மாவட்டம் கீழஅழகியநல்லூர் கிராமத்தில், மயில் (31) என்ற பெண் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன், தாயை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
