Skip to content

திருச்சி…46வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு…. ஒரு வாரமாக வீணாகும் தண்ணீர்… கவனிப்பார்களா..?…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு வ.உசி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் சக்தி இயக்கம், மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!