மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூரில் காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

