Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

கர்​நாடக மாநிலம் சிக்​மகளூருவை சேர்ந்​தவர் நடிகை ரன்யா ராவ்​(32). கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமச்​சந்​திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்​னடம், தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட மொழி திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். தமிழில் நடிகர் விக்​ரம் பிரபு நடித்த ‘வா​கா’ திரைப்​படத்​தில் அவருக்கு ஜோடி​யாக ந‌டித்​துள்​ளார்.

இதையடுத்து அதி​காரி​கள் அவரை பவுரிங் மருத்​து​வ​மனைக்கு அழைத்து சென்​று, மருத்​துவ பரிசோதனை மேற்​கொண்​டனர். பின்​னர் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அவரை ஆஜர்​படுத்​தி, மார்ச் 18-ம் தேதிவரை காவலில் எடுத்​துள்​ளனர். இதைத் தொடர்ந்து அதி​காரி​கள் ரன்யா ராவிடம் நேற்று 8 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

அப்​போது, நடிகை ரன்யா ராவ் வணிக நோக்​கத்​துக்​காக துபா​யில் இருந்து தங்​கம் கடத்தி வந்​தேன் என்று கூறிய​தாக தெரி​கிறது.  கடந்த ஆண்டு மட்டும்  40-க்​கும் மேற்​பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், வரும்​போதெல்​லாம் பெல்ட், பை, உடைகளில் தங்​கம் கடத்தி வந்​த​தாக கூறி​யுள்​ளார்.  துபாய் செல்லும்போதெல்லாம்  ஒரே மாதிரியான உடையே அணிந்து  சென்று வந்துள்ளார். கடந்த 15 நாட்​களில்  மட்டும் 4 முறை அவர் துபாய் சென்று வந்​துள்​ளதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்து அதி​காரி​கள் ரன்யா ராவ் ஒவ்​வொரு முறை​யும் துபாய் சென்று வந்​த​போது எப்​படி சோதனை​யில் இருந்து தப்​பி​னார்? அவர் அப்​போதெல்​லாம் என்ன மாதிரி​யான உடைகளை அணிந்​திருந்​தார்? அவரை சோதனை செய்ய விடா​மல் ஒவ்​வொரு முறை​யும் விமான நிலை​யத்​தில் அழைத்து சென்ற காவல்​துறை உயர் அதி​காரி யார்? எவ்​வித சோதனை​யும் இல்​லாமல் விஐபிகள் செல்​லும் பாதை​யில் இவரை அழைத்து சென்​றது எப்​படி என விசா​ரணையை முடுக்​கி​விட்​டுள்​ளனர்.

இதனிடையே வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் நேற்று பிற்​பகலில் பெங்​களூரு​வில் உள்ள‌ நடிகை ரன்யா ராவின் வீட்​டில் சோதனை நடத்​தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனை​யில், அவரது வீட்​டில் இருந்து ரூ.2.67 கோடி ரொக்​கப்​பணத்தை கைப்​பற்​றினர். இந்த பணம் கட்​டுக்​கட்​டாக க‌ட்​டில் மெத்​தைக்கு அடி​யில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அதே​போல ரகசிய லாக்​கரில் வைக்​கப்​பட்​டிருந்த ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளை​யும் பறி​முதல் செய்​தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்​பிலான சொத்​துக்​களின் ஆவணங்​களை​யும் அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக தெரி​வித்​துள்​ளனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் அவர் 40 முறையும், இந்த ஆண்டு இதுவரை 8 முறையும் அவர் துபாய்க்கு விமானத்தில் பறந்து சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை ரன்யா ராவ், துபாய் சென்று வந்த போது எல்லாம், ஒரே ஆடையை மட்டுமே அணிந்து சென்று வந்துள்ளார். தங்கத்தை உடலில் பதுக்கி கடத்தி வருவதற்கு ஏற்ப அந்த ஆடையை அவர் பிரத்யேகமாக தயார் செய்து அணிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகை ரன்யா ராவ் மட்டும் இந்த தங்க கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பில்லை என்று நம்பும் அதிகாரிகள் இந்த  கடத்தலில்  பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று  சந்தேகிக்கிறார்கள். ஏனெனில் ரன்யா ராவ் கடத்தி வரும் தங்க கட்டிகளை வாங்கும் நபர்கள் யார் யார்?, துபாயில் தங்கம் வாங்க அவருக்கு பணம் வழங்கியது யார் யார்?, இந்த தங்க கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது குறித்து டில்லி வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரித்து உண்மைகளை அறியும் முயற்சியில் டில்லி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரன்யா ராவ்.  பொறியியல் பட்டதாரி. அவரது தாயார், காபி செடி விளைவிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது  வளர்ப்பு தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல்துறையின் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக (டிஜிபி) உள்ளார்.
இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை டிஜிபி ராமசந்​திர ராவ் கூறியதாவது:  ‘‘எனக்​கும் நடிகை ரன்​யா​ரா​வுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. எங்​களுக்​குள் எவ்​வித பேச்​சு​வார்த்​தை​யும் இல்​லை. 4 மாதங்​களுக்கு முன்பு ரன்யா ராவுக்கு பெங்​களூருவை சேர்ந்த தொழில​திபர் ஜதின் ஹுக்​கேரி​யுடன் திரு​மணம் நடந்​தது. அதன்​பிறகு அவர் எங்​களு​டன் பேசுவ​தில்​லை. அவருடைய கணவர் என்ன வேலை செய்​கிறார் எனவும்​ தெரி​யாது. தங்​கம்​ கடத்​தி​ய​தாக வந்​த செய்​தி எனக்​கு பெரும்​ அதிர்​ச்​சி​யை​யும்​ ஏ​மாற்​றத்​தை​யும்​ தந்​தது. அவர்​ தவறு செய்​திருந்​​தால்​ சட்​டப்​படி நடவடிக்​கை எடுக்​கலாம்​” என்​றார்​.
error: Content is protected !!