Skip to content

நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு 2015ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் உள்ளார். நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கான கல்வி  நிதி உள்பட பல்வேறு வகையான கோரிக்கைகளை பிரதமரிடம்  வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
error: Content is protected !!