Skip to content

மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமம், கிழக்குத் தெருவில் வசித்துவரும் திரு.பழனி என்பவரின் மகள்கள் செல்வி.சிவசங்கரி (வயது 18), செல்வி.அபினயா (வயது 14) மற்றும் திரு.ராஜேந்திரன் என்பவரின் மகன் செல்வன்.ராஜேஷ் (வயது 13) ஆகிய மூவரும் இன்று (21.5.2025) காலை அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
error: Content is protected !!