தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமன தாக்கல் அடுத்த திங்கட்கிழமை(ஜூன்2) தொடங்குகிறது. இதில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
அதிமுகவில் ஒரு சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அந்த கட்சி கேட்டு வருவதாக தெரிகிறது. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை எம்.பி ஆக்கி மத்திய அமைச்சர் ஆக்க அந்த கட்சி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காக ஒரு சீட்டை பாஜக கேட்டு வருவதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, கட்சியின் தேசிய தலைமை தான் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார். அதிமுகவிடம் சீட் கேட்கவில்லை என அவர் கூறாததால் அண்ணாமலைக்காக சீட் கேட்பது உறுதியாகி உள்ளது.