Skip to content

கடன் தொல்லை- அரியானாவில் 7 பேர் தற்கொலை

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த  ஒரு  ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த  சம்பவம்  அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த போலீசார், உடனடியாக வந்து, உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  அளவுக்கு அதிகமான கடன் தொல்லை  காரணமாக அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  காரில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் கடன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், சம்பவம்  குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். தடயவியல் நிபுணர்களும் அந்த காரில்  தடயங்களை சேகரித்தனர்.

இறந்தது  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த  பிரவின் மிட்டல் குடும்பம் என தெரியவந்தது.  இறந்தவர்கள் அவரது பெற்றோர், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள். இவர்கள்  பஞ்ச்குலாவுக்கு ஒரு மத நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது இந்த துயரமான முடிவை எடுத்துள்ளனர்.

error: Content is protected !!