Skip to content

திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்   யுவராணி ( 30).திருச்சி புறநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் . இவர் வீட்டை பூட்டிவிட்டு  சாவியை வாசலின் அருகே வெளியே வைத்துவிட்டு கணவர் மணிவண்ணனுடன்  மார்க்கெட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். வீட்டை திறந்து பார்த்தபோது,   பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த  4 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீடு  புகுந்து நகையை எடுத்து சென்று விட்டனர். இது குறித்து  பெண் போலீஸ் யுவராணி, கே. கே. நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  திருடனை தேடி வருகிறார்கள்.
error: Content is protected !!