கோவை கருமத்தம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான எச்பி பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென இந்த மினி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டும் பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கருமத்தம்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
எனினும்,இந்த விபத்தில் மினி பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த பெட்ரோல் பங்க் தப்பியது. இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
