Skip to content

புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதிருக்கும் முகா ம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்கை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர்  கலெக்டர் அருணா கூறியதாவது:

திருநங்கைகளின் பொருளாதாரத்தினை உயர்த்திடும் வகையில்  முதல்வர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதிருக்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்ததுல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கதுல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதிருக்கும் முகாமில்  இன்று 52 திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களுக்கான வீட்டுமனைப் பட்டா, சிறுதொழில் கடன், ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மேலும் இம்மனுக்ககளின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இம்முகாமில் திருநங்கைகளுக்கு ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கான ஆலோசனையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கான கடனுதவிகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.

எனவே, தமிழக அரசின் மூலம் திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் இத்தகைய நலத்திட்டங்களை திருநங்கைகள் அனைவரும் உரிய முறையில் பெற்று  பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இம்முகாமில், மாவட்ட சமூகநல அலுவலர்மு.சியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அருணா சந்தைப்பேட்டை அரசு  மகளிர் மேல்நலைப்பள்ளியில் போதை  எதிர்ப்பு மன்றத்தை தொடங்கி வைத்து

போதை ஒழிப்பு உறுதிமொழி வாசித்தார். அதனை அனைவரும் திரும்ப சொல்லி உறுதி
ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!