Skip to content

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தமிழ்நாட்டில் இருந்து  ராஜ்யசபாவுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி  நடக்கிறது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்து 4பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில்  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், கே. பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்,  எஸ்.பி. வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

6பேருக்கு மேல் போட்டியிட்டால் தேர்தல் நடைபெறும். இல்லாவிட்டால்  மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

error: Content is protected !!