Skip to content

ஜெயங்கொண்டம் – சாமி சிலைகள் கடத்திய வழக்கில் ஒருவர் கைது…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்துவாஞ்சேரி சாலையில், விக்கிரமங்கலம் போலீசார் கடந்த மாதம் மே 22ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவவழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவலர்களை கண்டவுடன், திரும்பி தட்டி ஓட முயற்சி செய்தனர். காவலர்கள் பின்தொடர்ந்து சென்றபோது சாக்கு மூட்டையுடன் வந்த இரண்டு நபர்கள், குணமங்கலம் பிரிவு சாலை அருகே, சாலையின் ஓரத்தில் சாக்கு முட்டை மற்றும் இருசக்கர வாகனத்தை, போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
காவலர்கள் சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது சாமியின் உலோக சிலைகள் உள்ளதை கண்டறிந்தனர். ஒரு அடி உள்ள இரண்டு சாமி சிலைகளும், முக்கால் அடி உள்ள ஒரு சாமி சிலை, அரை அடி உள்ள ஒரு சாமி சிலை, சாமிசிலை வைப்பதற்கான ஒரு பீடமும் காவலர்களால் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து விக்ரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமானூர் அருகே உள்ள சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக வைப்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதில் சாமி சிலைகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது கீழே போட்டு விட்டு ஓடிவிட்ட ராஜேந்திரனின் மகன்கள் பாரதி, வல்லரசு ஆகிய இருவரும் சிங்கப்பூர் சென்று வேலை செய்வது வருவதால் அவர்களையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
ராஜேந்திரனை கைது செய்த காவலர்கள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

error: Content is protected !!