மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக கட்ட ரூ 1 கோடியே 90 லட்சத்தில் கட்டுவதற்காக நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ ) செல்வராஜ் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நகர மன்ற
துணை தலைவர் S.S.குமார்,நகர மன்ற உறுப்பினர்கள் காந்தி,Er.ரமேஷ் சிட்டி செந்தில் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.