Skip to content

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல் பகுதியில் சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த மின்  அறுந்து செல்வத்தின் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக பகுதிக்கு சென்ற செல்வத்தின் உறவினர்களும் பொதுமக்களும் மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் மின்வாரிய அதிகாரிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தையில் நடத்தினர். உயிரிழந்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது தொடர்ந்து உயிரிழந்த செல்வத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!