கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட சின்னார் பதி மலைவாழ் மக்கள் கிராமம் இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் மலைவாழ் மக்கள் குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாகவும் அருகில் உள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர் இவர்கள் ஆழியார் அணை கட்டும் பொழுது அப்பகுதியில் இருந்த வனப் பகுதியில் வசித்து வந்தனர் ஆழியார் அணை கட்டும்பொழுது இடம் பெயர்ந்து வால்பாறை சாலை மலை அடிவாரம் சின்னார் பதி என்ற இடத்தில் தங்கள் குடும்பங்களுடன் குடியேறினர் ஓலை குடிசைகள், கூடாரங்கள் வாழ்து வந்தனர் இவர்களுக்கு குடியிருப்புகள் இல்லாததால் அரசுக்கு பலமுறை தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை வைத்தனர் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தனியார் அறக்கட்டளை ஐ பவுண்டேஷன் சார்பாக முதல் கட்டமாக 16 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது மீதமுள்ள குடியிருப்புகள் விரைவில் கட்டப்படும் என வனச்சரகர் ஞானபால முருகன் தெரிவித்தார் மலைவாழ் மக்கள் குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமணன் கூறுகையில் தங்களுக்கு குடியிருப்பு கட்டப்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தங்களது ஐம்பது வருட கனவு தற்போது நினைவாகியுள்ளது மேலும் தங்களது பகுதிகளுக்கு வனவிலங்குகள் அதிகமாக நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் சோழர் லைட் அமைத்து தர உள்ளனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .
தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
- by Authour
