Skip to content

பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
இந்த நிலையில் காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை , போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது
இங்கிருந்து வரும் உபரிநீர் மற்றும் சிற்றுடைகளில் இருந்து வரும் தண்ணீர் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் இன்று மதியம் நிலவரப்படி ஆழியார் அணை 100 அடியை எட்டி உள்ளது அணைக்கு வினாடிக்கு 1020 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும் அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் ஆழியார் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!