Skip to content

திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

  • by Authour
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில்  இருந்து வளைகுடா நாடுகள் மற்றம் ஐரோப்பிய நாடுளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இரந்து   வளைகுடா நாடுகளான சார்ஜா, துபாய் செல்லும் விமானங்கள் இன்று (ஜூன் 24) திடீரென ரத்து செய்யப்பட்டது.  இதனால் வெளிநாடு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி  வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.55 மணிக்கு துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
error: Content is protected !!