Skip to content

திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில், இது அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு. இந்த மலையின் உச்சியில்   சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. அங்கு ஆடு, கோழி  பலியிடப்படுவது வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம்  சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கோழி, ஆடு பலியிட்டு உணவு வழங்கப்பட்டது சர்சையானது.  அங்கு  ஆடு கோழி பலியிடுவதை தடை செய்ய வேண்டும் எ ன  ராமலிங்கம், பரமசிவம் என்பவர்கள்  மதுரை ஐகோர்ட் கிளையில்  மனு தாக்கல் செய்தனர்.  அப்துல் ஜப்பார் என்பவரும்  மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் நிஷா பானு,  ஸ்ரீமதி ஆகியோா் அமர்வில்  விசாரிக்கப்பட்டு வந்தது.  தற்போது இந்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

error: Content is protected !!