Skip to content

இந்தியாவில், தடுப்பூசியே போடாத 14 லட்சம் குழந்தைகள்- அதிர்ச்சி தகவல்

  • by Authour
அனைத்து குழந்தைகளுக்கும்  போலியோ, டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ், தட்டம்மை, சளி, ரூபெல்லா, காசநோய், ஹெபடைடிஸ் பி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி (Hib), ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா, ரோட்டா வைரஸ், வெரிசெல்லா ஆகியவற்றிற்கான தடுப்பூசிகளை கட்டாயம் போடவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் நிமோனியா, போலியோ, அம்மை போன்ற உயிருக்கு ஆபத்தான 11 நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கும் முக்கிய தடுப்பூசிகளில், ஒரு தடுப்பூசி கூட போடாமல் இந்தியாவில் மொத்தம் 14.4 லட்ச குழந்தைகள் இருப்பதாக 2023 வரையிலான லான்செட் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. 204 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில்தான் இந்த சிக்கல் அதிகம் இருப்பதாகவும், கொரோனா காலத்துக்குப் பின்னரே இந்த நிலை உள்ளதாகவும்  தெரியவந்துள்ளது. உலகளவில் தடுப்பூசி போடப்படாத 1.57 கோடி குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எட்டு நாடுகளில் மட்டுமே வசித்து வருவதாகவும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் (53 சதவீதம்) மற்றும் தெற்காசியாவில் (13 சதவீதம்) என்றும் லான்செட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் நைஜீரியாவில் 24.8 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகளும் ஒரு தடுப்பூசி கூட போடாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு (8,82,000), எத்தியோப்பியா (7,82,000), சோமாலியா (7,10,000), சூடான் (6,27,000), இந்தோனேசியா (5,38,000), மற்றும் பிரேசில் (4,52,000) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. .
error: Content is protected !!