தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய முகாம் தொடங்கப்படும். இந்த முகாமில், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரூ.1,000 வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றியையும் தனது உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்