புதுச்சேரி மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருக்கிறார். பாஜகவை சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோர் நியமன எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.
இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை 3 பேரும் சபாநாயகர் செல்வத்திடம் கொடுத்தனர். முன்னதாக பாஜக அமைச்சர் நமச்சிவாயம் ,பாஜக தலைவர் செல்வகணபதிஆகியோர் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
ராஜினாமா செய்த 3 பேருக்கு பதில் வேறு 3 பேரை எம்.எல்.ஏக்களாக நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு உள்ளது. அவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தொகிறது.