புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப் பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன கூறை வேலைப்பாடுகள் இங்கு மிக நோ்த்தியாக அமையப் பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜா கோவிலில் பொன்னால் கூறை அமைய பெற்றுள்ளது போல ஆத்மநாதசுவாமி திருக்கோவில் செம்பினால் கூறை அமையப் பெற்ற சிறப்புடையது.
திருவாடு துறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில் மாணிக்கவாசகா் இறைவனை வழிபட்டதாக கருதப்படுகிறது.அவரால் எழுப்பப்பட்டதே இவ்வாலயம். புதுக்கோட்டை மாவட்டத்தில்சிறப்பு பெற்ற ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருப்பெருந்துறை என அழைக்கப்படும் ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி ஆனித்திருமஞ்சன திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆத்மநாதா… ஆத்மநாதா..என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர்.