திருச்சி மத்திய ஜெயிலில் 1500 -க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தண்டனை கைதிகள் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் நன்னடத்தை அடிப்படையிலான கைதிகள் மூலம் ஜெயிலுக்கு வெளியே அதன் வளாகத்தில் பிரியாணி, சிக்கன் 65 கடைகள நடத்தப்படுகிறது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் அங்கே கைதிகள் மூலமாக வளர்க்கப்படும் ஆட்டு இறைச்சியும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சிறைத்துறை மூலமாக பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 25க்கும் மேற்பட்ட கைதிகள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த பெட்ரோல் பங்கை சிறைத்துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
டிவிசன் அதிகாரி கார்த்திக் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் திருச்சி காந்திமார்க்கெட் மகளிர் சிறை முன்பும் பெட்ரோல்பங்க் கைதிகளால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
