Skip to content

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட  ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்  மேற்கண்ட 2 மண்டல  தூய்மை பணியாளர்கள்  13 தினங்களாக  தொடர் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து  அன்று மாலை விடுவித்தனர்.  அதன் பிறகும் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இந்த போராட்டத்தை  எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு, இதை வைத்து அரசியல் செய்யலாம் என கருதி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று  தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  நடந்தது இதில்  தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். அதன்படி  தூய்மை பணியாளர்களுக்கு  காலை டிபன்  வழங்கப்படும். வீட்டு வசதி,  குழந்தைகளுக்கான கல்வி செலவு ஆகியவற்றை அறிவித்தார். இதனை தூய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து  தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும்  புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்-அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக தூய்மை பணியாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூய்மை பணியாளர்களான எங்களுக்கு, எங்கள் நலனுக்காக அரசு அறிவித்த புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் எங்களுக்கு தந்த திட்டங்களால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. முத்தாய்ப்பாக தனியாக எங்களுக்கென்று நல வாரியம் உருவாக்கியதற்கு காலம் முழுவதும் நன்றி சொல்வோம்.

இந்த திட்டங்கள் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் உறுதியுடன், எங்களை மதித்து எங்களுடைய நீண்ட கால கோரிக்கையினை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த  தங்கள் தலைமையினை  அரசை மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற துறைகளுக்கும் செய்யப்படுவதைப் போல எங்கள் ஊதியத்தையும் காலத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கு, தூய்மை பணியாளர்களை தாய்மை பணியாளர்கள் என போற்றுகின்ற எங்கள் முதல்-அமைச்சர் உறுதி செய்வார் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும்   நம்புவதைப்போல் பெருநகர மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களும் நம்புகின்றோம். மரியாதையுடன், தூய்மை பணியாளர்கள் சார்பில் நன்றி.. நன்றி… நன்றி..!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!