Skip to content

எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்பு: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 4-ம் கட்ட பிரச்​சாரத்தை செப்​.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்​கொள்​கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம், திரு​மங்​கலம், விருதுநகர் மாவட்​டம் திருச்​சுழி தொகு​தி​கள், 2-ம் தேதி மதுரை மேற்​கு, வடக்கு தொகு​தி​கள், 3-ம் தேதி மதுரை மாநகர், மதுரை மத்தியம், தெற்கு ஆகிய தொகு​தி​கள், 4-ம் தேதி சோழ​வந்​தான், உசிலம்​பட்​டி, தேனி மாவட்​டம் ஆண்​டிப்​பட்டி ஆகிய தொகு​தி​கள், 5-ம் தேதி தேனி மாவட்​டம் கம்​பம், போடி​நாயக்​க​னூர், பெரியகுளம் தொகு​தி​களில் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.செப்​.6-ம் தேதி திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தம், திண்​டுக்​கல், நிலக்​கோட்டை தொகு​தி​களி​லும், 7-ம் தேதி ஆத்​தூர், ஒட்​டன்​சத்​திரம், பழநி தொகு​தி​கள், 9-ம் தேதி கோவை மாவட்​டம் தொண்​டா​முத்​தூர், கிணத்​துக்​கட​வு, 10-ம் தேதி பொள்​ளாச்​சி, வால்​பாறை, உடுமலைப்​பேட்​டை, 11-ம் தேதி மடத்​துக்​குளம், தாராபுரம், காங்​கே​யம், 12-ம் தேதி திருப்​பூர் தெற்​கு, திருப்​பூர் வடக்​கு, பல்​லடம் தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது. ஏற்கனவே 3 கட்ட தொகுதி பிரச்சாரங்களை முடித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சார பயணத்திலும் கரூர் மாவட்ட தொகுதிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.  கரூர் சுற்றியுள்ள நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ள எடப்பாடி என்ன காரணத்தினாலோ கரூரை தவிர்த்து வருகிறார்.  திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் அதிமுக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை எடப்பாடி புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!