Skip to content

திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துலாநதி நீரோடையில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபடுவதாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் சப்இன்ஸ்பெக்டர் ரூகன் தலை மேலான கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த இடத்தில் டிப்பர் லாரி மற்றும் பதிவு எண் இல்லாத பொக்லைன் எந்திரத்தை விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச்

சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஓட்டுநர்கள் மாரியப்பன் (32), சூர்யா (30) மற்றும் டிப்பர் லாரி உரிமையாளரான காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த திருப்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!