Skip to content

அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது,

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள்; தூர்வாரிடவும், மரக்கிளைகளை சீரமைத்தல் மற்றும் பலவீமான மரங்களை அகற்றிடவும், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ள அடைப்புகளை அகற்றிடவும்;, பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்திடவும் அத்தகைய கட்டமைப்புகளை பாதுகாப்பாக இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திடவும், பலவீனமான மின்கம்பங்கள் / HT மற்றும் LT மின்கம்பிகள்; ஆகியவற்றை கண்டறிந்து அவைகளை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும் அனைத்து அரசு கட்டிங்களின் மேற்கூரையிலிருந்து குப்பைகளை அகற்றிடவும், அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்திடவும், பொது இடங்களான மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், etc., போன்ற இடங்களில் அடைபட்டுள்ள வடிகால்களை அடையாளம் கண்டு சரிசெய்திடவும் நிலையான மழை அளவீடுகளை ஆய்வு செய்து, அவைகள் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்திடவும் போதுமான அளவில் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகளை தேவைப்படும் இடங்களில் முன்கூட்டியே இருப்பு வைத்திடவும் சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்களை திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கவும் மாவட்டத்திலுள்ள நீர்;நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் ஏரி, மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரிடவும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான

மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திடவும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும்; உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திடவும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிடவும் மாநில பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற காவலர்களை தயார் நிலையில் வைத்திடவும் பொதுவிநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்களை இப்பருவமழை காலங்களில் 3 மாதங்களுக்கு இருப்பு வைத்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னார்வ அமைப்புகளை பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திடவும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து அவைகளை உடனடியாக இடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அக்கட்டிங்களை முழுமையாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும். வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல்ஃபுகார் தெரிவித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள், கோவிந்தராஜ் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்) மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகர், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துக்கொண்டனர்.

error: Content is protected !!