Skip to content

கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை கூறியிருப்பதாவது: –

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (செப்டம்பர் 29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்துக் கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!