தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார். மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை கைப்பற்றினர் . மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
