கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் வருகை தந்துரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் தான்தோன்றி மலை பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.