Skip to content

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 13ஆம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய மனுவை தள்ளுபடி செய்தது.
வெங்கடேசன் அக், 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் காக மனு தாக்கல் செய்யப்பட்டது இதை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.. இதை எடுத்து இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தனது வழக்கறிஞர்களோடு வெளியே வந்தார்..
அப்போது வெங்கடேசன் நிருபர்களிடம் கூறும்போது…

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இருக்கிறேன் மற்றவைகள் அனைத்தும் தலைமையில் இருந்து பேசுவார்கள் என்றார்.
வழக்கறிஞர் அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செல்வ பாரதி கூறும் போது
வெங்கடேசன் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெங்கடேசன் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த சம்பவத்தில் எவ்வளவு இழப்பீடு என்று எஃப் ஐ ஆர் இ குறிப்பிடப்படவில்லை ஒரு சம்பவத்திற்கு இரண்டு எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது பல்வேறு அழுத்தத்தின் காரணமாக பொய்யாக பிணையப்பட்ட வழக்கு.
இதையடுத்து நீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துச் சொன்னோம் இதை எடுத்து நீதிபதி இவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறதுஎன்று கூறி ஜாமீன் வழங்கினார். தொடர்ந்து சட்டரீதியாக நீதிமன்றத்தில் இவர் மீது தப்பில்லை என்பதை நிரூபிப்போம். ஒரு வாரத்திற்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்றார்..

error: Content is protected !!