இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் இருந்து தனியார் வாகனத்தில் சென்னைக்கு அழைத்து வந்து இன்று மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்.
சிபிஐ விசாரணை தீவிரமடையும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 2 பேரும் வரும் நாளை கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்புக்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை ஒட்டி, சமூக வலைதளங்களிலும் பல்வேறு விவாதங்கள் வெடித்துள்ளன. சிலர் இதை அரசியல் நுணுக்கமான நடவடிக்கையாக விமர்சிக்கின்றனர். கரூரில் நடந்த துயரச் சம்பவத்ததால், எதிர்காலத்தில் இத்தகைய கூட்டங்களில் பாதுகாப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

