Skip to content

கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை, பூஜைகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது.

நாளை பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக் கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்று கோவா பொதுப்பணித் துறை மந்திரி திகம்பர் காமத் தெரிவித்தார். இது உலகின் மிக உயரமான ஸ்ரீ ராமரின் சிலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவா கவர்னர் அசோக் கஜபதி ராஜு, முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய மந்திரி ஸ்ரீபத் நாயக், மாநில மந்திரிகள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

error: Content is protected !!