திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

