சென்னை, வானகரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்த இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த இபிஎஸ் வாகனத்துடன் தொண்டர்களும் மண்டபத்திற்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுக்குழு கூ

ட்டத்திற்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களுக்கு ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இபிஎஸ் வாகனத்தை நோக்கி முண்டியத்த தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைதொடர்ந்து போலீசார் பாதுகாப்பாக பொதுக்கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

