கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில்,
ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தனது இடம் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஜீவசமாதி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
45 ஆண்டுகளாக சாமியாராக இருந்த மாணிக்கவேல் உடலை

ஜீவசமாதி செய்ய விடாமல் செய்ததால் ஊர் பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல்துறையினர் அந்த இடத்திலிருந்து உடலை எடுத்துச் செல்ல அறிவுறுத்திய

நிலையில் காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

