Skip to content

இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதி உள்ளது இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைய இடங்களில் நிற்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பிலே இந்த சங்கத்திற்கான தனி ஒரு மாத இதழ் கிராமப்புற பாட்டாளி என்கிற இதழ் வெளியிட்டு விழா நடைபெறுகிறது இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் கலந்து கொண்டார்
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்

தவெக தலைவர் விஜய் திமுக தீய சக்தி தவெக தூய சக்தி என சொல்லிய விமர்சனத்திற்க்கு பதில் அளித்தார் மகாத்மா காந்தி வேலை உறுதிப்பு திட்டத்தை சீர்குளித்தவர்கள் தீய சக்தி இல்லை நாடு முழுவதும் இருக்கிற 30 கோடி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்திருக்கிறவர்கள் தீய சக்தி இல்லை அதை எதிர்த்து போராடுகிற ஒரு கட்சியே தீய சக்தி என்று ஒருவர் சொல்லுகிறார். கல்விக்காக கொடுக்க வேண்டிய நிதி 2500 கோடி ரூபாய் கொடுக்கல அது தீய சக்தி என்று அவருக்கு தெரியவில்லை. ஆகவே எது தீயது எது நல்லது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என கூறினார் மேலும் சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கேள்விக்கு..

இந்த முறை நிறைய இடங்கள்ல நிற்போம் தமிழ்நாடில் 234 தொகுதி இருக்கிறது எங்களுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

error: Content is protected !!