கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கொடியைசைத்து துவக்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியானது வட்டாரப் போக்குவரத்து

அலுவலகத்தில் தொடங்கி கரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
இந்த ஹெல்மெட் பேரணி விழிப்புணர்வு போது வாகனங்களில் இருவருக்கும் மேல் செல்வதை தவிர்ப்போம், சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம், குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம், இரு சக்கர

வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துதான் ஓட்ட வேண்டும், சாலை விதிகளை மீறிவது இழிவான செயல் என எண்ண வேண்டும், ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம், சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் உள்ளிட்ட என கரூர் மாவட்ட காவல்துறை

கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா அறிவுறுத்தினார். காவல்துறையினர்,ஊர்க்காவல் படையினர் என பலர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

