Skip to content

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு.. கலெக்டருக்கு 25ம் தேதி விருது

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது

தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதில் சிறந்த தேர்தல் மாவட்டங்கள் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கௌரவிக்கிறது அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 14 மாவட்டங்கள் அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது இதில் தேர்தல்களின் தொழில்நுட்பத்தை திறமைப்பட பயன்படுத்துதல் பிரிவில் 2025 ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்திற்கான விருதுக்கு தஞ்சை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

இப்பட்டியலில் தஞ்சை மாவட்டத்துடன் பீகாரில் உள்ள கிழக்கு சாம்பரான் மாவட்டம் கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தியது வாக்காளர் சேர்த்தல் நீக்கல் தொடர்பாக வீடு வீடாகச் சென்று படிவம் வழங்கி அதை இணைய வழியில் பதிவேற்றம் செய்து விரைவாக மேற்கொண்டது இதன் மூலம் இத்திட்டத்தை வாக்காளர்களுக்கு சிரமங்கள் இன்றி எளிதாக செயல்படுத்தியது உள்ளிட்ட பணிகளை பாராட்டி சிறந்த மாவட்ட விருதுக்கு தஞ்சை தேர்வு செய்யப்பட்டுள்ளது இதற்காக டெல்லியில் வருகிற 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது

error: Content is protected !!