ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்த வீட்டிலேயே நகையைத் திருடிவிட்டு, திருடுபோனதாக கணவரிடம் நாடகமாடியுள்ளார். உடனே வக்கீலான கணவர், அறையில் மறைவாக பொருத்தப்பட்ட சிசிடிவி-ஐ சோதித்தார். அதில், அவர் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற போது, மனைவியே நகையைத் திருடியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து, போலீஸ் விசாரணையில், தனக்கு தெரிந்தவரின் பணத் தேவைக்காக இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
