சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரிய மனு ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பதிலை ஏற்று வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

