Skip to content

மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு கார்த்திக் தனது வீட்டின் அருகே இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்துவதால் குடும்பப் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதிய கார்த்திக், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கார்த்திக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த செங்கற்களைக் கொண்டு கார்த்திக்கின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், தப்பியோட முயன்ற வேல்முருகன், அய்யாதுரை மற்றும் முனியசாமி ஆகிய 3 பேரையும் இன்று காலைக்குள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே மது போதையில் தகராறு செய்த வழக்குகள் உள்ளனவா என்பது குறித்துப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார்த்திக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!