கரூரில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள், தாங்கள் சேர்ந்திருந்த கட்சிகளில் இருந்து

விலகி, திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாள்தோறும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

