Skip to content

தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 480 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.50 லட்சம் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 30,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!