Skip to content

நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம், குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்த பலரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி அதிவேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நைஜீரியாவில் சாலைகளின் மோசமான தரம் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதாக அந்நாட்டுப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!